Wednesday, January 29, 2014

மலைக்க வைக்கும் மலேசியா 1


                                                     எந்த ஒரு பயணம் சென்றாலும் அனுபவத்தையும் அதன் மூலம் அறிவும் ஊட்டிய தந்தைக்கும் பறக்க சிறகு தந்த மாமனாருக்கும் பல ஆண்டுகளுக்கு பிறகும் நினைவுபடுத்தி கொள்வதற்காக எனக்கும் ......இந்த பயண அனுபவங்கள் .....


                                                     பனை மரங்கள் நிறைந்த அழகிய மலேசியா,மலைகாடுகளை சீர்படுத்தி கட்டப்பட்ட வானுயர் கட்டிடங்களையும் படுத்து உருளும் அளவுக்கு சுத்தமாக இருக்கும் சாலைகளையும் உடைய சிங்கார சிங்கப்பூர் ....

                                                     இவற்றை விடவும் சிலிர்ப் பூட்டியது அந்நிய மண்ணில் முதல்முறையாக செலவு செய்த பத்து நாட்கள்.


                                                     லே முரியா travels உதவியுடன் பலரிடமும் கேட்டு தெரிந்து கொண்டபின் நாங்களே தயார் செய்து கொண்ட அட்டவணையுடன் 'மலேசியா ஏர்லைன்ஸ் ,பயணம்'.இந்திய நேரப்படி காலை 11.50 மணிக்கு இரண்டரை மணி நேரம் பயணம் செய்து கோலாலம்பூர் வந்தடைந்தது 6.30 மணிக்கு. பனைமரங்கள் தோப்புக்குள் தரை இறங்குவதை போல் எங்கும் பனை மரங்கள் .மிக பிரம்மாண்டமாய் கோலாலம்பூர் விமான நிலையம்,50 கிலோமீட்டர் ஒலி எழுப்பாத வேன் பயணம் ,அஞ்சப்பர் சாப்பாடு ,சுத்தமான தமிழகத்தில் இருந்தது போல் இருந்தது GRANDSEASONS  ஹோட்டல் வந்தடையும் முன்னர் மின்னொளியில்  வெள்ளியியாய் மின்னிய PETRONAS TOWER வெளியில் இருந்து கண்டுகளித்தோம் .



No comments:

Post a Comment